கொரோனா தடுப்பூசி மூலம் எந்தவொரு பாலியல்ஆரோக்கியத்தில் எந்த பாதிப்புகளும் ஏற்படாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் சர்வதேச ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட தெரிவித்தார்.
எனவே சமூக ஊடகங்கள் அல்லது பிற ஊடகங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களுக்கு பொதுமக்கள் ஏமாறாமல், தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.