தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி இரவு தனுஷும், ஐஸ்வர்யாவும் சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.
தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்களின் முடிவை அறிவித்து இன்றுடன் ஒரு மாதமாகிவிட்டது. அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும், நண்பர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.
ஆனால் தனுஷும், ஐஸ்வர்யாவும் மனம்மாறிய பாடில்லை. இனி சிங்கிளாக இருப்பது என்று முடிவு செய்துவிட்டாராம் தனுஷ். அப்பா ரஜினிக்காக தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ நினைத்த ஐஸ்வர்யா அதற்கான முயற்சியில் இறங்கினார்.
அவருக்கு தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா உதவி செய்தார். ஆனால் ஐஸ்வர்யாவின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. அதன் பிறகு அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை.
யார் என்ன சொன்னாலும் இனி மீண்டும் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் தனுஷும், ஐஸ்வர்யாவும் உறுதியாக இருக்கிறார்களாம். ஆனாலும் இரு வீட்டாரும் தங்களின் முயற்சியை மட்டும் கைவிடுவதாக இல்லையாம்
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.