தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ரட்சிதா.
இதற்கு முன்னதாக பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் இவர் தற்போது கன்னட திரையுலகில் படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இவர் நடித்து வருவதன் காரணமாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகுவார் என கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து ரக்ஷிதாவுடன் கேட்டதற்கு இந்த கேள்வியை நீங்கள் இயக்குனரிடம் தான் கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாய் பாய் மஹா என நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகியதை உறுதி செய்துள்ளார். ரக்ஷிதாவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஏற்கனவே கொரானா காரணமாக இந்த சீரியலில் நடித்து வந்த நாயகிகள் நீக்கப்பட்டு ரக்ஷிதா ஒப்பந்தமான நிலையில் தற்போது அவரும் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.