Sri Lanka News Live and Tamil Breaking News

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம்… பெங்களூரில் குவியும் ரசிகர்கள்!

0 5

- Advertisement -

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது கர்நாடக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்செய்தியை கேள்விப்பட்ட அவரின் ரசிகர்கள் சோகத்துடன் பெங்களூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கன்னடத் திரையுலகின் ஜாம்பவான் நடிகர் ராஜ்குமார். அவருக்கு சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் என மூன்று மகன்கள். அதில் சிவராஜ்குமாரும் புனித் ராஜ்குமாரும் இன்றைய கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள்.

சிவராஜ்குமார் ஹீரோவாக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்தார். ஆனால் புனித், தன்னுடைய அப்பாவின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே கிட்டத்தட்ட 13 படங்கள் நடித்திருக்கிறார்.

அதில் ‘பெட்டடா ஹுவு’ என்ற படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். குழந்தை நட்சத்திரம் என்றால் ஐந்தாறு வயதில் நடிப்பர். ஆனால், புனித் ராஜ்குமாரோ ஆறு மாத கைக்குழந்தையாக இருக்கும்போதே திரையில் வந்துவிட்டார்.

‘அப்பு’ என்ற படத்தில் நாயகனாக சான்டல்வுட்டுக்கு அறிமுகமானார். படம் சூப்பர் ஹிட். இந்தப் படத்தின் ரீமேக்தான் தமிழில் சிம்பு நடித்த ‘தம்’. தன்னுடைய கரியரின் தொடக்கத்தில் நிறைய படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்று நினைக்காமல் வருடத்திற்கு ஒரு படம், இரண்டு படம் என கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தார், புனித்.

‘நாடோடிகள்’, ‘போராளி’, ‘இவன் வேற மாதிரி’, ‘பூஜை’ ஆகிய தமிழ் படங்களின் கன்னட ரீமேக்கில் நடித்திருக்கிறார். ‘போராளி’ படத்தின் கன்னட ரீமேக்கை சமுத்திரக்கனியே இயக்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, தமிழ்த் திரையுலகை கவனித்தும் தமிழ் இயக்குநர்களுடன் நல்ல நட்பு பாராட்டியும் வந்திருக்கிறார் புனித். இவரது அப்பா பெயரில் இவர் நடித்த ‘ராஜ்குமாரா’ என்ற படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது.

கடைசியாக ‘யுவரத்னா’ என்ற படத்தில் சாயிஷாவுடன் நடித்திருந்தார். ‘புட்டபொம்மா’ பாடலை போலவே இருக்கும் அந்தப் படத்தின் ஒரு பாடல் கொண்டாடப்பட்டது.

ஸ்டன்ட்ஸ், டான்ஸ் இரண்டிலும் புனித் கில்லி. தற்போது ‘ஜேம்ஸ்’, ‘த்வித்வா’ என இரண்டு படங்கள் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியாகக் காத்திருக்கின்றன. 46 வயதேயான இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது கன்னட சினிமா உலகம் மட்டுமன்றி இந்தியா சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

புனித் தன் கண்களைத் தானம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More