- Advertisement -
எத்தனையோ சீரியல்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த சீரியலில் வரும் கதாபாத்திரங்களை தங்கள் வீட்டில் உள்ளவர்கள் போன்று பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறார் என்று கூறப்பட்டது. காவ்யாவுக்கு பதில் அபிநயா நடிப்பார் என்றார்கள்.
முன்னதாக வி.ஜே. சித்ரா தான் முல்லையாக நடித்து வந்தார். அவர் இறந்த பிறகு காவ்யாவை முல்லையாக்கினார்கள். சித்ரா இறந்த பிறகு முல்லை கதாபாத்திரம் மீதான பிடிப்பு போனது.
தற்போது காவ்யாவும் மாறினால் அவ்வளவு தான் என்று நினைத்தபோது தான் உண்மை தெரிய வந்திருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து காவ்யா விலகவில்லையாம். அவர் தான் முல்லை. அவரின் தோழியாக அபிநயா நடிக்கப் போகிறாராம்.
நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் இருந்து நடிகர்கள், நடிகைகள் விலகுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் காவ்யா பற்றி அப்படி ஒரு தகவல் வெளியானதும், ரசிகர்கள் நம்பிவிட்டார்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.