சர்ச்சை நடிகை என்றாலே ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது கங்கனா ரணாவத். இந்திய அரசு கங்கனாவுக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அளித்து கவுரவித்தது.
இந்த நிலையில் தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கங்கனா ரணாவத் அறிவித்துள்ளார்.
வருகிற ஆண்டுகளில் நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்று கங்கனா ரணாவத்திடம் கேட்டபோது, ‘‘விரைவில் நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன்.
வர இருக்கும் ஆண்டுகளில் குழந்தைகள் பெற்று ஒரு தாயாக என்னை நான் பார்க்க ஆசைப்படுகிறேன்” என்றார். உங்கள் வாழ்க்கையில் மனம் கவர்ந்த பிரத்தியேகமான ஆண் இருக்கிறாரா? என்று கேட்டபோது, ‘‘ஆம் இருக்கிறார். அவரைப் பற்றி விரைவில் அனைவருக்கும் தெரியவரும்” என்றார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.