நானும் ரெளடிதான் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருவதால் ரசிகர்களுக்கு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தப்படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளதால் படம் வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில் அதனை தொடர்ந்து படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது.
முதல் கட்டமாக நயன்தாரா தனது பணியை தொடங்கினார். பெரும்பாலான படங்களில் நயன்தாரா டப்பிங் செய்வதில்லை என்ற நிலையில் இந்த படத்தில் அவரே தனது கேரக்டருக்கு டப்பிங் குரல் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’நான் பிழை’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
அனிருத் இசையில், ரவி மற்றும் சாஷா திருப்பதி குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.