தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. இவர் சில தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தார்.
இதனை தொடர்ந்து கடப்பாவில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதாக முன்பு அங்குள்ள அமீன் பீர் தர்காவிற்கும் சென்றார். நேற்று சமந்தா ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார்.
ஆனால் தெலுங்கு மீடியாக்களில் சம்ந்தா கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக செய்திகள் பரவியதால் பரபரப்பு எழுந்தது.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சமந்தாவின் மானேஜர் மறுப்பு தெரிவித்துள்ளார். “லேசான இருமல் இருந்ததால் அவர் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டார்.
தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரைப் பற்றிய சமூக வலைத்தள வதந்திகளை நம்ப வேண்டாம்,” என கூறியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.