பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியது முதலே பரபரப்புக்கும் பஞ்சாயத்துக்கும் பஞ்சமே இல்லாமல் செல்கிறது. பிக்பாஸ் வீட்டில் இன்று திருடன் போலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிக்பாஸ் வீடு ஒரு பாதி போலீஸ் ஸ்டேஷனாகவும் மறுபாதி திருடர்களின் அடகு கடையாகவும் உள்ளது.
இதில் வனிதா, சுஜா வருணி, தாடி பாலாஜி, அனிதா சம்பத், தாமரை செல்வி, ஷாரிக் உள்ளிட்டோர் போலீஸாகவும், அபிராமி, பாலாஜி முருகதாஸ், ஜூலி உள்ளிட்டோர் திருடர்களாகவும் உள்ளனர். இந்த விளையாட்டு எல்லை மீறி போனதால் போட்டியாளர்களின் தனிப்பட்ட பொருட்களும் சேதப்படுத்தப்பட்டது.
இதனால் கடுப்பான வனிதா, என் பொருட்களை உடைத்தால் வீட்டை உடைச்சு நொறுங்கிடுவேன் என கூறி யூனிஃபார்மை கழட்டி எறிந்து விட்டு டாஸ்க்கில் இருந்து வெளியேறுவதாக கோபமனார். இதையடுத்து வெளியான அடுத்த ப்ரமோவில் போட்டியாளர்கள் அனைவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்திருக்கின்றனர்.
அப்போது வனிதா ஜூலியிடம் எதை தூக்கி போட்டாய் என்று கேட்க ஒன்றும் தெரியாதது போல் உள்ளார் ஜூலி. தொடர்ந்து பேசும் வனிதா ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்காத, பிஞ்சுரும்.. என் சென்ட் பாட்டீலை எடுத்து டாய்லெட்க்குள்ள போட்டுருக்க.. அசிங்கமா இல்ல உனக்கு… பொருளோட மதிப்பு தெரியாதா? என் ஸ்ட்ரென்த்த காட்டணும்னு நினைக்கிறீங்களா என கேட்டு சரமாரியாக விளாசுகிறார்.
வனிதா பிடித்து ஏறு ஏறு என ஏற ஜூலி அமைதியாக உட்காந்திருக்கிறார். மொத்தத்தில் ஜூலி தேவை இல்லாமல் வனிதாவை தொட்டு வாங்கிக் கட்டிக்கொள்கிறார் என்பது மட்டும் தெளிவாகியுள்ளது. நேற்றைய டாஸ்க்கிலேயே பல போட்டியாளர்கள் எங்களுக்கு ஜூலியை பிடிக்கவில்லை என முகத்திற்கு நேராக கூறியது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.