விஜய் டிவியில் அறிமுகமாகி யாரடி நீ மோகினி சீரியலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை ஸ்ரீநிதி.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி அவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து அவரது அம்மா, ஸ்ரீநிதி டிப்ரஷனில் இருப்பதாலே இப்படியெல்லாம் பேசுவதாகவும், அவரை யாரும் திட்ட வேண்டாமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும் சின்னத்திரை நடிகை நட்சத்திராவின் திருமணம் தொடர்பாக இவர் வெளியிட்ட வீடியோவும் கடும் பரபரப்பை கிளப்பியது. தற்போது மன அழுத்த்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார் ஸ்ரீநிதி.
இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் “வலிமை படத்தை பற்றி ஏன் விமர்சித்தேன் என்றால் அது ஒரு படம், அதை விமர்சனம் செய்ய யாருக்கு வேண்டுமானாலும் உரிமை இருக்கிறது”.
“இப்போவும் கேட்டால் ‘வலிமை சுமாரான படம்’ என்று தான் சொல்வேன். அது எனக்கு பிடித்த படம் இல்லை என்றாலும் இந்த சமுதாயத்திற்கு தேவையான ஒரு படம் தான்” என தெரிவித்துள்ளார்.
இப்போ எதற்காக திடீரென ‘வலிமை’ பற்றி பேசுறீங்க என கேட்கப்பட்ட போது, ‘என்னை வீட்டில் வைத்து பூட்டிவிட்டார்கள். தனிமையில் இருக்கிறேன். என்ன செய்ய’ என கேட்டிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.