அஜித்தும் விஜய்யும் தங்களை நண்பர்களாக காட்டிக் கொண்டாலும் அவர்கள் இன்னமும் விரோதிகளாகதான் இருக்கிறார்கள் என பிரபல பத்திரிகையாளரான வளைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவரும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளனர். இருவரை பற்றியும் அல்லது இருவரின் படங்கள் தொடர்பான அப்டேட் என்றாலும் அவர்களின் ரசிகர்கள் டிவிட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் இருவரின் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதும் சமூக வலைதளங்களில் வாடிக்கையாகி வருகிறது. ரசிகர்கள் தரம் தாழ்ந்து மோதிக்கொள்ளும் நேரத்தில் நடிகர்கள் இருவரும் நண்பர்களாக உள்ள நிலையில் ரசிகர்கள் இப்படி மோதிக்கொள்கிறார்களே என்று பலர் வருத்தப்படுவதும் உண்டு.
இந்நிலையில் அஜித் விஜய்யின் நட்பு குறித்து பிரபல பத்திரிகையாளரான வளைப்பேச்சு பிஸ்மி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “அஜித்தும் விஜய்யும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் விரோதிகளாக ஆகிவிட்டனர்.
ஒரு முறை விஜய்யின் தந்தை எஸ்ஏசி அஜித் குறித்து கமெண்ட் அடித்தார். இதையடுத்து அஜித் நேரடியாகவே விஜய்யை எதிர்த்து பேசினார். அவரது படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் கூடஇமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன.. என்று கேட்டிருப்பார்.
நான் அஜித்துக்கு நெருக்கமாக இருந்தப்போது என்னிடம் , நான் எந்த பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். விஜய்யின் அப்பா அப்படி பேசுகிறார் வருத்தப்பட்டுள்ளார். என்னை போல் பல பத்திரிக்கையாளர்களிடம் வருத்தப்பட்டுள்ளார்.
பின்னர் மங்காத்தா படத்தின் தனக்கும் விஜய்க்கும் நல்ல நட்பு இருப்பதாக காட்டிக் கொண்டனர். அஜித் பிரியாணி செய்து கொடுத்தார். விஜய் அவருக்கு வாட்ச் பரிசளித்தார். இதனால் உலகம் இருவரும் நல்ல நண்பர்கள் என்று நினைத்து கொண்டிருக்கிறது. ஆனால் இருவருக்கும் இடையிலான தொழில் போட்டி கடுமையாக உள்ளது.
அதற்கு இரண்டு சம்பவங்களை உதாரணமாக சொல்கிறேன். எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், அஜித் விஜய் என்று சொல்வார்கள். பத்திரிகையில் அஜித் விஜய் என்று எழுதினால் விஜய்யும் சரி, விஜய் தரப்பும் சரி பர்சனலாக அப்படி எழுதாதீர்கள், விஜய் அஜித் என்று எழுதுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
இதற்கு அர்த்தம் தான்தான் நம்பர் ஒன் என்று காட்டி கொள்வதற்காகதான். வெளியில் இருவரும் நண்பர்களாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் இப்படி ஒரு விஷயம் போகிறது”. இவ்வாறு கூறியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.