நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கிய இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.
அதனை தொடர்ந்து அமெரிக்காவில் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய தனுஷ், மீண்டும் ஐதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
அண்மையில் வெளியான ‘மாறன்’ பட மோஷன் போஸ்டரில் கொரோனா பரவல் காரணாமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் விவேக் எழுதி தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ள ‘மாறன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகியுள்ளது.
தியேட்டர் ரிலீசுக்கு தயாரான ‘மாறன்’ படத்தை ஓடிடி-யில் வெளியிட உள்ளதால் நடிகர் தனுஷ் கடும் அப்செட்டில் உள்ளாராம். வழக்கமாக தன்னுடைய படங்கள் குறித்து எந்த அப்டேட் வந்தாலும், அதனை சமூக வலைதளங்களில் பகிரும் தனுஷ், மாறன் படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடுவதில்லை.
நேற்று வெளியான பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை கூட தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவில்லை தனுஷ்.
ஆனாலும் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் தனுஷ் இப்படியெல்லாம் பண்ணலாமா என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.
‘மாறன்’ படத்தில் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.