கொழும்பு, செப்டெம்பர் 15
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இங்கிலாந்து மற்றும் ஜப்பான் விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறும் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி மேலும் 10 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் கூறப்படுகின்றது.
தங்களுக்கு மேலும் பத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
கொழும்பு, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் மாவட்டத் தலைவர்கள் இந்தப் பட்டியலில் உள்ளடங்குவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் வகிக்கும் அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக 18 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் தற்போதைய அரசாங்கத்தில் 38 இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.