கொழும்பு,செப் 18
நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைப்பது சாத்தியம் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் மற்றும் நாணயம் என ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் இலங்கை தற்போது மீண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இலங்கைக்கு கடன் தேவை என சுட்டிக்காட்டிய அமைச்சர், ரஷ்ய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்குள் வீதிகள் மற்றும் புகையிரத பாதைகளை நிர்மாணிப்பதில் ரஷ்யா கணிசமான பங்களிப்பை வழங்க முடியும் என அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியல் போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது 100% பாதுகாப்பானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.