மகா சிவராத்திரிஅதிர்ஷ்டம்
மகா சிவராத்திரியில் கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய சேர்ந்திருப்பதால் சிவனின் அருளால் மகிழ்ச்சியும் செழிப்பும் பெருகும். குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும். மகா சிவராத்திரி நாளில் பேரதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
மேஷம்
இந்த மகா சிவராத்திரியில் இருந்து சிவனின் அருளால் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தின் நிலை மேம்படும்.
ரிஷபம்
மகா சிவராத்திரியில் இருந்து ரிஷப ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கப் போகிறது. சிவராத்திரி நாளில் சிவனை விரமிருந்து வழிபட்டால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
சனி-சூரியன் கும்ப ராசியில் இணைந்திருப்பதால் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் கிடைக்கும்.