100-வது டெஸ்டில் களம் இறங்கும் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
‘இந்திய கிரிக்கெட்டில் இது ஒரு மைல்கல். நாட்டுக்காக ஒரு வீரர் விளையாடத் தொடங்கும் போது 100 டெஸ்ட் என்பது ஒரு கனவாக இருக்கும். ஏனெனில் 100 டெஸ்டில் ஆடுவது எளிதான விஷயம் அல்ல. கோலிக்கு இது ஒரு மகத்தான தருணம். இன்னும் அவர் நிறைய சாதனைகள் படைப்பார் என்று நம்புகிறேன்’ என்று கங்குலி குறிப்பிட்டார்.
தெண்டுல்கர் கூறுகையில், ‘என்ன ஒரு அற்புதமான சாதனை. 2007-08-ம் ஆண்டில் நாங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடிக்கொண்டிருந்த போது விராட் கோலி பற்றி முதல்முறையாக கேள்விப்பட்டேன். அப்போது மலேசியாவில் நடந்து கொண்டிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
அதில் ஒரு வீரர் நன்றாக ஆடுவதாக என்னிடம் கூறினர். அது தான் கோலி. பின்னாளில் நானும், அவரும் இணைந்து இந்திய அணிக்காக விளையாடினோம். எங்களது பயணம் நீண்ட காலம் இல்லை என்றாலும் என்னுடன் இருந்த சமயங்களில் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்ததையும், ஆட்டத்திறனை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டியதையும் அறிவேன். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பே அவரது உண்மையான வெற்றி’ என்றார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.