அரச மற்றும் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் அனைத்தும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
2021 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளே நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை நடத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவு தவிர்ந்த ஏனைய வகுப்புக்களுக்கு பெப்ரவரி 3 ஆம் திகதி மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டு, மார்ச் 7 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு மாத்திரம் ஏப்ரல் 8 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 18 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்.
இதேபோன்று நாடளாவிய ரீதியிலுள்ள இஸ்லாம் பாடசாலைகளுக்கு ஏப்ரல் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு மே மாதம் 4 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்.
அதற்கமைய 2021 ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி நிறைவடைவதாக கல்வி அமைச்சு கடந்த வாரம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.