ஜோதிடத்தில் சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
அதுவும் இந்த ராசியில் சனி பகவான் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்த கும்ப ராசியில் சனி பகவான் மார்ச் 2025 வரை இருப்பார்.
சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருக்கும் காலத்தில், அவ்வப்போது ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார்.
தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வரும் சனி பகவான், தீபாவளிக்கு பின், அதாவது நவம்பர் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.
சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியானது அதிர்ஷ்டத்தைத் தரப் போகிறது. இப்போது சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் தீபாவளிக்கு பின் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பல துறைகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரத்தை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தொழிலில் இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது வியாபாரிகளுக்கு தீபாவளிக்கு பின் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மேலும் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
சனி பகவானின் அருளால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.