சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற ஒருவர், தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட சம்பவம், நல்லத்தண்ணி பகுதியில் இன்று (03) அதிகாலை 3.30 அளவில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நபருக்கு, சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லத்தண்ணி தனியார் வாகன தரிப்பிடத்தில் வைத்து, இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தீ வைத்துக்கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் யாத்திரிகர்களுடன் பஸ் ஒன்றில் வருகைத்தந்த குழுவிலுள்ள ஓரே இவ்வாறு தீ வைத்துக்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.