யுக்ரேன் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்க தொடர்ந்து மறுப்பதன் மூலம் ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு மேற்கு நாடுகள் பச்சைக்கொடி காட்டுகின்றன என்று யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.
தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஸெலன்ஸ்கி, ரஷ்யப் படையெடுப்பின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மேற்கு நாடுகளின் தலைவர்கள் அறிவார்கள்.
இந்நிலையில், யுக்ரேன் மீது விமானங்கள் பறக்கத் தடைவிதிக்க மறுப்பதன் மூலம் நகரங்கள், மாநகரங்கள் மீது குண்டு வீச புதினுக்கு அவர்கள் உரிமம் வழங்குகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
“மேலும் புதிய தாக்குதல்களும், இழப்புகளும் தவிர்க்கமுடியாதவை என்று தெரிந்தும், யுக்ரேன் வான்பரப்பை மூட நேட்டோ வேண்டுமென்றே மறுக்கிறது,” என்று கீயவில் இருந்து ஆற்றிய தமது காணொளி உரையில் ஸெலன்ஸ்கி கூறினார்.
முன்னதாக பிரசல்ஸ் நகரில் பேசிய நேட்டோ தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், யுக்ரேனில் நிலைமை கொடூரமாக இருப்பதாகவும், ஆனால், நேட்டோ படைகள் வான் வழியாகவோ, நிலம் வழியாகவோ யுக்ரேனுக்குள் நுழையாது என்றும் தெரிவித்தார்.
யுக்ரேன் வான் பரப்பில் நோ-ஃப்ளை-சோன் (வான் பறப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிப்பு வெளியிடப்பட்டால், அதை மீறிப் பறக்கும் ரஷ்யப் போர் விமானங்களை நேட்டோ ஜெட் விமானங்கள் சுட வேண்டி வரும். உடனடியாக மூன்றாம் உலகப் போர் மூளும் என்று மேற்கத்திய ஆட்சியாளர்கள் வாதிடுகிறார்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.