திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞனை, எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதமன்ற நீதிவான் விசானி தேனவது,நேற்று (22) உத்தரவிட்டார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், கந்தளாய் பகுதியிலுள்ள திருமணமான இளம் பெண்ணொருவரை அவரது கணவன் இல்லாத சந்தர்ப்பத்தில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரிவித்து, கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கணவனால் முறைப்பாட்டு மேற்கொள்ளப்பட்டது.
அதனையடுத்து, சந்தேக நபரை கைது செய்து பொலிஸார், கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட இளம் பெண், வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.