இந்திய கடனுதவியின் கீழ் இலங்கை அரசாங்கம் நீர்த்தாரை பிரயோக வாகனம் இறக்குமதி செய்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என, இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வெள்ளைநிற நீர்த்தாரை பிரயோக வாகனம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.
போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தும் புதிய நீர்த்தாரை வாகனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்தநிலையில், விசேடமாக நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி மற்றும் இந்தியாவிடம் கடன் வாங்கும் சூழ்நிலையில், இதுபோன்ற பணத்தை செலவிடுவது குறித்து சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.