வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கனகராயன்குளம் பகுதியில் பஸ்ஸுக்காக காத்திருந்த தந்தையும், மகளும் அவ்வீதியால் வந்து கொண்டிருந்த பஸ்ஸை வழிமறித்து அதில் ஏற முற்பட்டுள்ளனர்.
இதன்போது வவுனியாவில் இருந்து யாழ்.நோக்கி சென்றுகொண்டிருந்த லொறி கட்டுப்பாட்டை இழந்து குறித்த இருவரையும் மோதியுள்ளது.
விபத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த சிவசுப்பிரமணியம் சிந்துயா வயது 33 என்ற பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிக வேகமாக வந்த பாரவூர்த்தி வேகத்தை கட்டுப்படுத்த முடியால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.