நாட்டில் மேலும் 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 10 ஆண்களும், 10 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 3 ஆண்களும், 3 பெண்களும் உயிரிழந்தவர்களில் உள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்ட 7 ஆண்களும், 7 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(05) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,841ஆக அதிகரித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.