பண்டாரவளைப் பகுதியில். மாணவியொருவரது தலைமுடியை வெட்டிய நபர், ஹீல்ஓய ரயில் நிலையத்தில் மறைந்திருந்த வேளையில் பண்டாரவளைப் பொலிஸார், இன்று கைது செய்தனர்.
ஹீல்ஓயாப் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி, பண்டாரவளை நகரில் தனியார் மேலதிக வகுப்பொன்றிற்கு சென்று, தனியார் பஸ்சொன்றில் ஹீல்ஓயாவிற்கு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே, தனது தலைமுடியை இழந்தார்.
இது தொடர்பாக பண்டாரவளைப் பொலிஸருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து, மேற்கொண்ட தேடுதலில், மறைந்திருந்த சந்தேக நபரைக் கைது செய்தனர்.
இதன்போது குறித்த நபரின் பையை சோதனையிட்ட போது, மாணவிகள் மற்றும் யுவதிகளினது எனக் கருதப்படும் 38 நீண்ட தலைமுடிச் சுருள்களையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அழகிய பெண்களின் நீண்ட தலைமுடிகளை வெட்டி சேகரிப்பது தனது பொழுதுபோக்காக கொண்டிருப்பதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
33 வயதுடைய குறித்த நபர் விசாரணைகளின் பின்னர், அவர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.