பொகவந்தலாவை, சென் மேரீஸ் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், செவ்வகத்தை தோட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (13) மாலை 04.30 மணியளவில் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, கிரிக்கெட் சுற்று போட்டியைப் பார்க்கச் சென்ற பாரதிதர்ஷன் என்ற மாணவன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர் தேடிய போதே, மரக்கறி தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற ஆறரை அடி ஆழமான கிணறு ஒன்றில் மாணவன் சடலமாக கிடந்துள்ளதை கண்டுள்ளனர்.
அத்துடன், சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உதட்டுப்பகுதியில் காயங்கள் காணப்பட்டதாக தெரிவித்துள்ள பொகவந்தலாவை பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.