நாம் பணம் வைக்கக்கூடிய பர்சில் சில பொருட்களை வைப்பதால் அதனால் ஏற்படக்கூடிய எதிர்மறை ஆற்றலால் நமக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எந்தெந்த பொருட்களை நாம் நம்முடைய பணப்பையில் வைக்க கூடாது என பார்க்கலாம்.
பலரும் தன்னுடைய பணப்பையில் சிறிது கிழிந்த அல்லது சேதமடைந்த தேய்ந்து போன ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பார்கள்.
அதை சந்தையில் பயன்படுத்துவதும் கடினமாக இருக்கும். அதனால் பல நேரங்களில் பல ஆண்டுகள் நம்முடைய பணப் பையிலேயே வைத்திருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.
இவ்வாறு செய்வதால் அதனால் உருவாகக்கூடிய எதிர்மறை சக்திகள் நம்முடைய பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நம்மில் பலரும் பழைய ரூபாய் நோட்டுகள் அல்லது ரசீதுகள், காகிதங்களை நம் பணப்பையில் வைத்திருப்பது வழக்கம். ரசீதுகளையும் முறையாக பராமரிப்பது நல்லது என்றாலும் அவற்றை பர்சில் வைத்திருப்பது நல்லதல்ல.
இதுதான் உங்களுக்கு பண பற்றாக்குறை மற்றும் நிதி நிலை தடை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கையில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். உங்களின் நிதி நிலை சீர்படுத்த முதலில் அது போன்ற பொருட்களை பணப் பையிலிருந்து அகற்றுவது நல்லது.
பொதுவாக நமக்கு பிடித்தமான பிறந்தவர்களின் புகைப்படத்தை பர்ஸில் வைத்திருப்பார்கள். அவர்களின் நினைவுகளை போற்றுவது தவறல்ல. இருப்பினும் அவர்களின் புகைப்படத்தை வைத்திருப்பது சரியானதாக கருதப்படுவதில்லை.
உங்கள் வீட்டில் இறந்த உறவினர்களின் புகைப்படத்தை தெற்கு திசை நோக்கி வைத்து வழிபடலாம். ஆனால் உங்களின் பணப்பையில் வைக்க வேண்டாம். சாஸ்திரத்தின் படி இதனால் உங்களுக்கு நிதி இழப்பைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் பரிசில், சந்தையில் விலை போகாத பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்க வேண்டாம்.
இது உங்களுக்கு நிதி இழப்பை மட்டுமே ஏற்படுத்தும். பழைய நோட்டுகளை உங்கள் வீட்டில் வைத்து சேமிக்கலாம். மாறாக பரிசில் வைக்க வேண்டாம்.
நம்மில் பெரும்பாலும் தோலால் செய்யப்பட்ட பர்ஸ் பயன்படுத்துவதுண்டு. விலங்குகளின் பாதுகாப்பிற்காக, தோல் வர்த்தகத்தைக் குறைக்கும் வகையில் அவற்றை ஊக்குவிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
தோல் எதிர்மறை ஆற்றலை வரக்கூடியதாக அமையும். அதோடு அதில் கடவுள் படங்களை வைத்திருப்பதால் நிதி இழப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரிக்கும்.