பிரித்தானிய எம்.பி சர் டேவிட் அமெஸை குத்தி, கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியா எம்.பி. சர் டேவிட் அமெஸ், கடந்த வெள்ளிக்கிழமை தேவாலயத்தில் நடந்த, தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் .
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பொலிசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின் அந்த நபரின் பெயர் Ali Harbi Ali எனவும், சோமாலியா வம்சாவளியை சேர்ந்த இவர் இஸ்லாமிய தீவிரவாதத்தால் ஈர்கப்பட்டவர் என்றும் செய்தி வெளியானது.
ஆனால், இது குறித்து பொலிஸ் தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது Ali Harbi Ali-யின் புகைப்படத்தை பிரபல ஆங்கில ஊடகமான தி சன் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா? அல்லது அவருடைய இளம் வயதில் எடுக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை.
மேலும், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரின் நண்பர் Anjem Choudary, அவர் மிகவும் அழகான பையன். இஸ்லாமியரான அவர் கால்பந்தை ரசித்தார். மிகவும் சாதாரணமாகவே இருந்தார். நாங்கள் அனைவரும் சினிமாவுக்கு செல்வோம்.
ஒரு கட்டத்தில் திடீரென்று அவன், பல மோசமான வீடியோக்களை பார்த்தான். எல்லோரும் அவரிடம் வேண்டாம் சொல்வார்கள். ஆனால் அவன் மேற்கத்திய நாடுகளை வெறுக்க ஆரம்பித்தான்.
இணையத்தால் மிகவும் தீவிரமாக ஈர்க்கப்பட்டான். நாங்கள் முற்றிலும் கவலை அடைந்தோம் என்று கூறியுள்ளார்.
25 வயது மதிக்கத்தக்க Ali Harbi Ali வெளிநாடுகளில் பயங்கரவாதிகளால் இயக்கப்படவில்லை என்று புலனாய்வாளர்கள் நம்புவதாகவும், இருப்பினும், அவர் எப்படி தீவிரவாதி ஆனார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.