லண்டனில் கிரேன் ஒன்று அதிக எடை கொண்ட பொருளை கீழே இறக்கும் போது, எதிர்பாரமல் நடந்த விபத்தில் நபர் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் உள்ளூர் நேரப்படி 1.30 மணியளவில் கிரேன் விபத்தால் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள், துணை மருத்துவர்கள் ஆகியோருடன் பொலிஸார் விரைந்துள்ளனர். ஆனால், அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்பதை சோதித்து பார்த்த மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து பிரபல உள்ளூர் ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்த சம்பவம் சரியாக Vestry Street-க்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் நடந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி வழியே உள்ள இரண்டு சாலைகள் மூடப்பட்டுள்ளது.
இப்பகுதி வழியே செல்லும் 21, 76, 141, 271 பஸ்கள் மாற்றுப்பாதையில் செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.