Miracle Baby Born Under Debris Turkey : துருக்கியில் ஏற்பட்ட 5 நிலநடுக்கங்களுக்கு மத்தியில், இடிபாடுகளில் பெற்றோர் உயிரிழந்த நிலையில், புதிதாக பிறந்த குழந்தை மட்டும் உயிர் பிழைத்ததால், இந்தக் குழந்தையை அதிசய குழந்தை என அழைக்கப்படுகிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கனக்கான உயிர்கள் பலியாகியுள்ளன.
இறப்பு எண்ணிக்கை 5000-த்தை கடந்ததாக கூறும் நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறு வருகிறது, இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு மத்தியில் ஒரு நல்ல செய்தியாக, இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தியின் பெற்றோர் உயிருடன் மீட்க முடியாததால் அனாதையாக விடப்பட்டுள்ளது.
புதிதாகப் பிறந்த பெண் குழந்தை மற்றும் அதன் குடும்பத்தைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால், அவர்கள் சிரியாவின் கொடூரமான போரால் டெய்ர் எஸோரிலிருந்து அஃப்ரினுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தின் போது குழந்தையின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டதாக அறியப்படுகிறது.