50 ஆண்டுகளாக லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய தாத்தா 84 வயது தாத்தா போலீசில் சிக்கினார்
இங்கிலாந்தின் புல்வெல் பகுதியில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்நாட்டில் நெடுஞ்சாலைகளில் ANPR ரக கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
அந்த கேமராக்கள் சாலைகளில் செல்லும் வாகன எண்களை எடுத்து அந்த வாகன இன்சூரன்ஸ் வாங்கியுள்ளதா என ஆன்லைனில் செக் செய்யும் அப்படி இன்சூரன்ஸ் இல்லாத வாகனமாக இருந்தால் அருகில் உள்ள சோதனையில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்.
இப்படியாக போலீசாருக்கு ஒரு வாகனம் இன்சூரன்ஸ் இல்லாமல் குறிப்பிட்ட சாலையில் வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
போலீசாரும் அந்த வாகனத்தை சாலையில் மடக்கி பிடித்தனர். பிடித்து விசாரித்த போது இந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் 84 வயது தாத்தா இவர் ஓட்டி வந்த வாகனத்தில் இன்சூரன்ஸ் இல்லாதது மட்டுமல்ல இவரிடம் டிரைவிங் லைசென்ஸ் கூட கிடையாதாம்.
1938ம் ஆண்டு பிறந்த இவர் 12 வயது முதலே வாகனம் ஓட்டும் தொழிலுக்கு வந்துவிட்டாராம். அன்று முதல் இவர் வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்கவேயில்லையாம். அந்நாட்டில் 1972ம் ஆண்டிற்கு பிறகு தான் வாகனம் ஓட்ட லைசென்ஸ் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில் 50 ஆண்டுகளாக இவர் வாகனத்தை லைசென்ஸ் இல்லாமலேயே ஓட்டி வந்துள்ளார். இதில் ஒரு நாள் கூட இவரது வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தது இல்லை.
அதே நேரம் இவரும் இதுவரை அவரது வாழ்வில் விபத்தை ஏற்படுத்தியதே இல்லையாம். மிக பத்திரமாக வாகனத்தை ஓட்டியுள்ளார்.
இதையடுத்து போலீசார் அவருக்கு அபராதம் விதித்ததோடு அவர் இனி வாகனம் ஓட்டவும் அனுமதியில்லை அன அறிவித்தது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.