இங்கிலாந்து அரசு அந்நாட்டு மக்களை குழந்தைகளை வளர்ப்பதற்காக ஊக்க தொகைகளை பெற்றோர்களுக்கு வழங்குகிறது. குழந்தை பிறந்ததும். அந்த குழந்தையை வளர்க்கும்போது செலவினங்களுக்காக பெற்றோர்கள் அரசிடம் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்து அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தின் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த அலி பானா முகம்மது என்பவர் அரசை ஏமாற்றி ரூ19 கோடி பணத்தை சுருட்டியுள்ளார். இதற்காக அவர் கையாண்ட யுக்தி பலரை வியக்க வைத்துள்ளது. இந்த திட்டத்திற்காக இவர் 188 போலியான குழந்தைகளை தயார் செய்து அவர்களது பெயரில் இந்த ஏமாற்றுதனத்தை செய்துள்ளார்.
40 வயதான அலி பானா முகம்மது இங்கிலாந்து அரசிடம் போலியான குழந்தை ஆணவத்தை காட்டி அரசு பணத்தை பெற்றுள்ளார். இப்படியாக இவர் 188 முறை பெற்றுள்ளார்.
இந்த ஆவணங்களை சோதனை செய்த அதிகாரி ஒருவர் இது குறித்து ஆய்வு செய்த போது ஒரு குறிப்பிட்ட போன் நம்பருக்கு ஒன்றுக்கும் அதிகமான முறை பணம் சென்றுள்ளது. ஒவ்வொரும் ஒவ்வொரு குழந்தையின் பெயரில் இருப்பதை அறிந்து அதை விசாரித்தார்.
விசாரிக்கும் போது குறிப்பிட்ட நபர் இதுவரை 188 முறை பணம் பெற்றிருந்தது தெரியவந்தது. அவர் இதுவரை 70 குழந்தைகளின் பெயர் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி அரசிடமிருந்து ரூ19 கோடியை சுருட்டியுள்ளார். இந்த செய்தி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.