இந்த உலகில் நடக்கும் பல விஷங்கள் விநோதமாகவும் மர்மமாகவும், விளக்கமே அளிக்க முடியாத அளவிலும் இருக்கும். அப்படியான விஷயத்திற்கு பின்னால் என்ன தான் நடந்திருக்கும் என பலருக்கு விதமான யூகங்கள் இருக்கும்.
இப்படியாக அமெரிக்காவில் ஒருவர் இறந்து 12 மணிநேரம் வரை அவரிடமிருந்த பல போன்கால்கள் வந்த வண்ணம் இருந்தது.
1950 ம் ஆண்டு அக். 16ம் தேதி கலிஃபோர்னியா மாகாணத்தில் பிறந்தவர் சார்லஸ் இ. பெக், இவர் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்டாக சால்ட் லேக் விமான நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு வேன் நியூஸ் விமான நிலையத்தில் வேலைக்காக விண்ணப்பித்திருந்தார். அங்கு வேலை கிடைத்தான் தனது காதலி ஆட்ரியாவை திருமணம் செய்துவிட்டு ஒன்றாக வாழலாம் என முடிவு செய்தனர்.
இதற்கிடையில் பெக்கிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகியிருந்தது. இந்த தகவல் தெரிந்து தான் ஆட்ரியாவை அவரை காதலித்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு செப் 12ம் தேதி நேர்காணுக்காக இவர் லாஸ்வேகாஸ் சென்று அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் மூர்பார்க் செல்ல திட்டமிட்டிருந்தார். அங்கு அவரது காதலி ஆண்ட்ரியா அவரை பிக்கப் செய்து நேர்காணல் நடக்கும் இடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
லாஸ்வேகாஸ் வந்திறங்கியவர் மெட்ரோ ரயிலில் ஏறினார். அந்த ரயிலில் அப்பொழுது 225 பேர் பயணித்தனர். இந்த ரயில் சரியாக மாலை 4.45 மணிக்கு மூர்பார்க் செல்ல திட்டமிடமிப்பட்டிருந்தார்.
ரயிலை ரயில் இன்ஜினியர் ராபர்ட் சேன்செஸ் என்பவர் இயக்கினார். இந்நிலையில் ரயில் சாட்ஸ் வோர்ட் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஒரு மெட்ரோ ரயிலுடன் மோதியது. இந்த விபத்து அமெரிக்காவின் மிகப்பெரிய ரயில் விபத்தாக மாறியது.
இந்த விபத்தில் 135 பேர் காயமடைந்தனர். 25 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பெக்கும் பரிதாபமாக பலியாகிவிட்டார். ஆனால் இந்த தகவல் பெக்கிற்காக ரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த அவரது காதலி ஆண்ட்ரியாவிற்கு தெரியாது.
ரயில் விபத்து நடந்து சில மணி நேரங்களுக்கு பிறகு தான் ஆண்ட்ரியா ரயில் விபத்து குறித்த செய்தியை ரேடியோ மூலம் கேட்கிறார். அதை கேட்டு அதிர்ச்சியடைகிறார். அவரது காதலன் பெக் உயிருடன் இருக்கவேண்டும் என பிரார்த்தனை செய்கிறார். ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு தன் காதலன் குறுத்து ஏதாவது தகவல் கிடைக்குமா என தேடி வருகிறார்.
இந்நிலையில் ரயில் விபத்து நடந்து 11 மணி நேரம் ஆகிவிட்டது. இந்த 11 மணி நேரத்திற்குள் பெக்கின் செல்போனிலிருந்து அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு பல்வேறு போன் கால்கள் வந்தது.
போன் வருவதை பார்த்தும் தனது காதலன்உயிருடன்தான் இருக்கிறார் என நினைத்தார் ஆண்ட்ரியா, ஆனால் போனை எடுத்தபோது எதிர்முனையில் வெறும் அமைதி மட்டுமே நிலவியது எந்த விதமான சத்தமும் இல்லை.
ஒருமுறை இருமுறை அல்ல பல முறை இவரது செல்போனிலிருந்து பலருக்கு போன் சென்றுள்ளது. ஆனால் யாரிடமும் பெக் பேசவில்லை. வெறும் அமைதி மட்டுமே நிலவியுள்ளது.
இந்த 11 மணி நேரத்தில் ஆண்ட்ரியாவிற்கு மட்டும் 35 முறை பெக் செல்போனிலிருந்து போன் வந்துள்ளது. இது மட்டுமல்ல பெக்கின் குழந்தை, சகோதரன், தங்கை, தாய் உள்ளிட்ட பலருக்கு விபத்து நடந்ததற்கு பிறகு பல முறை போன் கால்கள் சென்றுள்ளது. ஆனால் பெக் யாரிடமும் பேசவில்லை.
இதற்கிடையில் இவர்கள் பெக்கின் செல்போனிற்கு போன் செய்த போது அது தானாக வாய்ஸ் மெயிலுக்கு சென்றுள்ளது. இவர் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் மீட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் இவர்களுக்கும் போன்கள் வந்த வண்ணம் இருந்தன.
மாலை 4.45 மணிக்கு விபத்து நடந்த நிலையில் மறுநாள் அதிகாலை 3 மணி வரை இவரது செல்போனிலிருந்து விட்டு விட்டு வேறு வேறு நபர்களுக்கு கால்கள் சென்று கொண்டிருந்தன. ஆனால் யாரிடமும் யாரும் பேசவில்லை. 3 மணிக்கு பிறகு யாருக்கும் போன் கால்கள் செல்லவில்லை.
இந்நிலையில் மீட்டு பணியின் போது பெக்கின் உடல் அதிகாலை 4மணிக்கு இடர்பாடுகளுக்கு இடையே மீட்கப்பட்டது. அவரது உடலை ஆய்வு செய்த டாக்டர்கள் பெக்விபத்து நடந்த உடனேயே இறந்துவிட்டார். அவர் உயிருடன் போராடியிருக்க வாய்ப்பில்லை. அவர் உயிர்பல மணி நேரங்களுக்கு முன்பே பிரிந்துவிட்டது என அறிக்கை அளித்தனர். அப்படியானால் அவரது செல்போனிலிருந்து சுமார் 11 மணி நேரம் போன் செய்தது யார்?
இந்த செய்தி வெளியானதும் இது குறித்து பல தரப்பட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல தியரிகள் இந்த கால்கள் குறித்து சொல்லப்பட்டன. சிலர் செல்போன் எதன் மீதாவது பட்டு தெரியாமல் கால் சென்றிருக்கலாம் என கூறினார்.
ஆனால் செல் வந்தவர்களின் பட்டியலை பார்த்த போது பெக்கிற்கு பிடித்தமான நபர்களுக்கு மட்டுமே போன் சென்றுள்ளது. அவரது செல்போனில் உள்ள எல்லோருக்கும் போன் செல்லவில்லை அதுவும் ஒரே நம்பர் இல்லாமல் மாறி மாறி வேறு வேறு நபர்களுக்கு போன் சென்றுள்ளது.
சிலர் அவர் விபத்தில் சிக்கியதை தெரிந்ததும் வேண்டுமென்ற அவரது செல்போனை ஹேக் செய்து மற்றவர்களை ஏமாற்ற இப்படியாக செய்திருக்கலாம் என கூறினர்.
ஆனால் பெக் இந்த ரயிலில் பயணிப்பது அவரது காதலி ஆண்ட்ரியாவை தவிர யாருக்கும் தெரியாது. இவரது கால்கள் வரும் போது கூட இவருக்கு தெரிந்தவர்களுக்கு இவர் ரயில் விபத்தில் சிக்கிய விஷயமே தெரியாது.
சிலர் இவர் இறந்த பின்பு இவரது ஆன்மா மூலம் இவருக்கு நெருக்கமானவர்களுடன் பேச முயற்சித்துள்ளார். ஆனால் இவரால் பேசமுடியவில்லை என கூறியுள்ளனர். ஆனால் இது நம்பிக்கை தான்.
இதில் முக்கியமான விஷயம் ஒன்று தெரியுமா? இவர் உடல் மீட்கப்படும் போது அங்கு இவர் பயன்படுத்திய செல்போன் யாருக்கும் கிடைக்கவில்லை. இடர்பாடுகளுக்கும் சிதறிபோய் இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.
அப்படி சிதறியிருந்தால் எப்படி போன் போயிருக்கும்? இந்த கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை. இதுவரை இந்த மர்மத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.