அயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை ஏலத்தில் விற்க விளம்பரம் கொடுத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர், மீன் பிடிக்க குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற நேரத்தில் இந்த பெண்மணி இத்தகைய விளம்பரத்தை இன்டர்நெட்டில் பதிவிட்டுள்ளார்.
லிண்டா மெக் அலிஸ்டர் எனும் அந்த பெண், குறிப்பிட்ட விளம்பரத்தில், “இவர் பெயர் ஜான், உயரம் ஆறடி, வயது 37, ஷூட்டிங், ஃபிஷ்ஷிங் ஆர்வம் உள்ள நபர், பீஃப் ஃபார்மர், இன்னும் வீட்டு வேளைகளில் கொஞ்சம் அனுபவம் தேவை, தற்சமயம் இவரை வைத்து மேய்க்க தனக்கு பொறுமை இல்லை”, என விளம்பரத்தில் தகவல்கள் பகிர்ந்துள்ளார். லிண்டா
மேலும், விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் சேர்த்துக் கொண்டு லூட்டி அடிப்பதாகவும், இரவு தாமதமாக உறங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதெல்லாம் தனது கோபத்தை தூண்டுவதாக வேடிக்கையாக பகிர்ந்திருந்தார் லிண்டா.
இந்த அயர்லாந்து ஜோடி கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர், இவர்களுக்கு கோல்ட் எனும் 4 வயது மகனும், ரைடர் எனும் 6 வயது மகனும் இருக்கின்றனர். தான் மீன் பிடிக்க சென்ற நேரத்தில், மனைவி இப்படி ஒரு விளம்பரம் வெளியிட்டதை ஜான் அறிந்திருக்கவில்லை.
விளம்பர செய்தியை ஆன்லைனில் கண்டு ஜானின் நண்பர்கள் அவரை அழைத்து அலர்ட் செய்த பிறகு தான், இந்த சம்பவம் குறித்தே அறிந்திருக்கிறார் ஜான். மேலும், இந்த விளம்பரம் குறித்து அறிந்த பிறகு, ஜான் கோபம் கொள்ளவில்லை, வேடிக்கையாக சிரித்தார் என்று லிண்டா கூறி இருக்கிறார்.
மேலும், இந்த விளம்பரம், குறிப்பிட்ட இணையத்தளத்தின் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்களுக்கு கீழ் இல்லாத காரணத்தால், குறுகிய நேரத்தில் நீக்கப்பட்டது. ஆனால், இந்த குறுகிய காலத்தில் 25 டாலருக்கு விற்பனை விலை நிர்ணயக்கப்பட்ட ஜானுக்கு 63 யூரோ வரை ஏலத்தின் விலை கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.