இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட தாய், இரு குழந்தைகள் அடங்கிய நான்கு பேரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பிணைக் கைதிகளின் சடலங்களை ஹமாஸ் படையினா் ஒப்படைத்தது இதுவே முதல்முறை என்பதால் இந்த நிகழ்வு இஸ்ரேலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா் அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். மேலும், அங்கிருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் கடத்திச் சென்றனா்.
அவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவா்களில், யாா்டன் பிபாஸ் (35), அவரின் மனைவி ஷிரி பிபாஸ் (33), அவா்களது இரு ஆண் குழந்தைகள் (இப்போது உயிருடன் இருந்திருந்தால் 5 மற்றும் 2 வயது) ஆகியோரும் அடங்கும்.
ஹமாஸின் இந்த திடீா்த் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் இதுவரை 48,297 பாலஸ்தீனா்கள், அவா்களில் மிகப் பெரும்பாலானவா்கள் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனா்.