கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா மூன்றாவது அலை உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரசின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனாவின் தாக்கம் ராக்கெட் வேகத்தில் எகிறி கொண்டிருந்துது. அங்கு மூன்றாவது அலை பரவ தொடங்கியதில் இருந்து முன்எப்போதும் இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில் 5.1 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.75 கோடியாக உயர்ந்துள்ளது.
இதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் கொரோனாவுக்கு 364 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து அந்நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1.29 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா முதல் அலையின்போது உலக அளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. தற்போது அங்கு கொரோனா மூன்றாம் அலையின் தாக்கமும் அதிகமாக உள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.