இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 ட்விட்டர் அலுவலகங்களில், 2 அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் அலுலவலகங்கள் செயல்பட்டு வந்த நிலையில், டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்கள் மூடப்பட்டு, அதில் பணியாற்றிய ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ட்விட்டர் நிறுவனம் பணிநீக்கம் செய்தது. நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் ட்விட்டரை நிதி ரீதியாக நிலைநிறுத்துவதற்கான முயற்சியாக பல்வேறு நடவடிக்கைகளை, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் எடுத்து வருகிறார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.