நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் முறையே 4.7, 5.3 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.
இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளம் மிகச்சிறிய நாடாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 2.64 கோடி மக்கள் வசிப்பது தெரியவந்தது.
நேபாளத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் பக்லுங் மாவட்டமும் ஒன்று. இந்நிலையில் தான் இன்று அதிகாலை பக்லுங் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆதிகாரி சவுர் பகுதியில் முதலிலும், அடுத்த அரைமணிநேர இடைவெளியில் குங்கா பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை நேபாள் நாட்டின் நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து அந்த மையம் கூறுகையில், ‛‛பக்லுங் மாவட்டம் ஆதிகாரி சவுர் பகுதியில் அதிகாலை 1.23 மணிக்கு முதலாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற அளவில் பதிவானது. அதன்பிறகு பக்லுங் மாவட்டம் குங்காவை அதிகாலை 2.07 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டரில் 5.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது” என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில் உயிர்சேதம், பலி எதுவும் ஏற்படவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.