உலகெங்கும் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் நியூசிலாந்து நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக திருமணம் போன்ற பொது விழாக்களில் 100 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும், கடை வீதிகள், பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரலல் தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) வரை அமலில் இருக்கும் என்றும் நியூசிலாந்து அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமது திருமணத்தை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர், பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. திருமண தேதி குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில், தற்போது திருமணத்தை ஒத்திவைப்பதாக ஜெசிந்தா கூறியுள்ளது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
41 வயதான ஜெசிந்தா, கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து கிளார்ட் கேபோர்ட் (45) என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். கிளார்ககை இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே Living Together வாழ்க்கை முறையில் 2018 இல் அழகான பெண் குழந்தையை ஜெசிந்தா பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.