கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய புயலுக்கு நடுவே, வீதியில் பயணித்த தாயாரும் மகளும் திடீரென்று உருவான குழிக்குள் புதைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் கலிபோர்னியாவினின் Chatsworth பகுதியில் ஏற்பட்டுள்ளது.
அனர்த்ததை அடுத்து ,வேகமாக செயல்பட்ட மீட்புக்குழுவினரால் அவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இருவரும் லேசான காயங்களுடன் காணப்பட்டதால், அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, கலிபோர்னியா மாகாணத்தில் புயலில் சிக்கி 14 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி குடும்பம் உட்பட ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.