மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்க்கினா பாசோவில் உள்ள தற்காலிகத் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர்.
சுரங்கத்தின் அருகே இருந்த சந்தையில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து தீப்பற்றி எரிந்ததால் வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
காயமுற்ற பலர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருக்கலாம் என AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், தங்கச் சுரங்கம் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்தி நிறுவனமான AIB தெரிவித்துள்ளது.
புர்க்கினா பாசோ ஆப்பிரிக்காவின் ஆகப்பெரிய தங்க உற்பத்தி நாடுகளில் ஒன்று. அந்நாட்டில் 2020ஆம் ஆண்டு 54 டன் தங்கம் உற்பத்தியானமை குறிப்பித்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.