கிரேக்கத்தில் விடுமுறையை கொண்டாட சென்ற பிரித்தானிய பெண் மாயமான நிலையில், தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் Bath பகுதியை சேர்ந்த 74 வயது சுசாந்த் ஹார்ட் என்பவரே கிரேக்க தீவான Telendos பகுதியில் விடுமுறையை கழிக்க சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஏப்ரல் 30ம் திகதி முதல் அவர் மாயமானதாக தகவல் வெளியானது. விடுமுறை பயணத்தில் அவரது கணவரும் உடன் சென்றுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் சுமார் 25 வருடங்களாக குடியிருக்கும் இந்த தம்பதி Telendos தீவுக்கு படகு மூலம் சென்றுள்ளனர்.
சம்பவத்தன்று, வெளியே சென்ற கணவர் எட் விடுதிக்கு திரும்பிய நிலையில், அவர் தமது மனைவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மூன்று வாரங்களுக்கு பிறகு ஹார்ட் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தீவின் கிராமப்பகுதி ஒன்றில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.