Sunday, May 19, 2024
Homeஉலகசெய்திகள்கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 இலங்கையர் கொலை; 19 வயது இலங்கையர் கைது

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 இலங்கையர் கொலை; 19 வயது இலங்கையர் கைது

HTML tutorial

கனடாவில் 6 இலங்கையர் கொலை: கனடா ஒட்டாவா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக 19 வயதான இலங்கையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைக்கு கத்தி பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை எனவும் ஒட்டாவா பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 இலங்கையர் கொலை; 19 வயது இலங்கையர் கைது

இலங்கையிலிருந்து அண்மையில் புலம்பெயர்ந்துச் சென்று கனடாவில் குடியேறிய ஜீ. காமினி அமரகோன் என்பவரின் குடும்பமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளது.

காமினி (40) ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலை சிகிச்சை பெறும் நிலையில், அவரது மனைவி தர்ஷினி டிலந்திக்கா ஏக்க நாயக்க (35) மற்றும் அவரது 7, 4 வயதுகளையுடைய பிள்ளைகளும் 2 வயதான இரட்டை பிள்ளைகளும் உயிரிழந்தனர்.

கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்