இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள “இம்புல்பே” நகரத்தின் பெயரை “பெலிஹுல்ஒய” என மாற்றுவதற்கு இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாண ஆளுநர் டிக்கிரி கெப்பேகடுவ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தை சுற்றுலா தளமாக மாற்றி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இம்புல்பே பிரதேசத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களும், இனி பெலிஹுல்ஒய என்றே அழைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.