- Advertisement -
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தான் மக்கள் லாகூரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் சிவில் சமுக அமைப்புக்களால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் கொடூர கொலைக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.
இதேவேளை, இலங்கையரின் கொலை தொடர்பான மனிதாபிமானமற்ற சம்பவத்திற்கு அவர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளில் இலங்கையிடம் மன்னிப்பு கேட்பதைக் காணமுடிகின்றது.
மேலும், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு குழுவினர் இலங்கையிடம் மன்னிப்பு கோரும் வகையிலான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.