- Advertisement -
இந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளால் 1,948 பேர் மரணித்துள்ளதுடன், கடந்த பத்து வருடங்களில் விபத்துகளால் 27,000 பேர் மரணித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாகன விபத்துகளை குறைப்பதற்காக அனைத்து மாகாண பஸ் சாரதிகளுக்கும் இரண்டு வாரங்கள் விசேட பயிற்சிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ், இந்த செயற்றிட்டம் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபை கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே வீதி விபத்துகளுக்கு சாரதிகளிடம் காணப்படும் ஒழுக்கம் இன்மையே பிரதான காரணமாக, கண்டறியப்பட்டுள்ளதுடன், இந்த நிலைமையை சீர் செய்வதற்காகவே இந்த பயிற்சி வேலைத்திட்டம் செயற்படுப்படவுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.