சரக்கு ரயில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்ததுள்ளது.
கண்டியிலிருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் பதுளை நோக்கி புறப்பட்டு வந்த சரக்கு ரயில் ரொசல் ரயில் நிலையத்தில் காலை 7.50 மணியளவில் தடம் புரண்டுள்ளது.
குறித்த ரயிலில் ஒரு பெட்டி தடம் புரள்வுக்கு உட்பட்டுள்ளதாகவும் இதனை மீண்டும் தண்டவாளங்களில் தடம் இருத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கொழும்பு மற்றும் பதுளையிலிருந்து செல்லும் பயணிகளை ரொசல்ல பகுதியில் கொழும்புக்கும் பதுளைக்கும் மாற்றியனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ரயில் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ரயில் பாதை புனரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.