இலங்கை கடற்படை, அரச புலனாய்வு சேவை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து, இலங்கைக்கு தென் கடலில், சர்வதேச கடல் எல்லையில் வைத்து கைப்பற்றிய 3,300 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியுடைய ஹெரோய்ன், கொழும்பு துறைமுகத்துக்கு இன்று (25) கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன், டுபாயிலிருக்கும் போதைப்பொருள் வர்த்தகரான “ஹரக்கட்டா“ என்பரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பது விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டது.
மேலும், அந்த நடவடிக்கைகளுக்காக, மேலும் இருவரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
தென் கடற்பரப்பில் வைத்து, இரண்டு டோலர் படகுகளில் கொண்டு வரப்பட்ட 300 கிலோகிராம் ஹெரோய்னுடன் 11 பேர், நேற்று (24) சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.