பூமி சூரியனுக்கும் முழு நிலவுக்கும் இடையில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. தற்பொழுது வர இருக்கும் சந்திரகிரகணம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
சந்திரனை அடையும் ஒளியானது பூமியின் வளிமண்டலத்தின் வழியாக ஒளிவிலகல் செய்யப்படுவதால் சந்திரன் சிவப்பு நிறமாக மாறும்.
இது குறுகிய அலைநீளங்களை வடிகட்டி நீண்ட அலைநீள சிவப்பு நிறங்களை மட்டுமே விட்டுச் செல்கிறது. அதனால் நிலவானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்க இருக்கிறது.
2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பூமிக்கு முழு சந்திர கிரகணம் வருகிறது.
இது மார்ச் 13, 14 ம் தேதி 2025 அன்று இரவு, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா பகுதியில் தெரியக்கூடும். இந்த கிரகணம் சுமார் 5 மணி நேரம் வரையில் நீட்டிக்கும் என்கிறார்கள்.