Turkey Earthquake Goalkeeper Body Found Trapped: துருக்கி தேசிய கால்பந்து அணியின் கோல்கீப்பராக செயல்பட்டு வந்தவர் 28 வயதான அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான். இந்த நிலையில் 6ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அவர் மாயமானதாக தகவல் வெளியானது.
ரிக்டர் அளவில் 7.8 என பதிவான நிலநடுக்கத்தை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் மீட்பு நடவடிக்கைகளிலும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இடிபாடுகளில் நடுவே அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் தனியார் கால்பந்து அணியான Yeni Matalyaspor குறித்த தகவலை உறுதி செய்துள்ளது.
தங்கள் அணியின் கோல்கீப்பரை இழந்துள்ளதாகவும், இயற்கை பேரிடருக்கு அருமையான ஒரு நபரை இழந்துள்ளோம் எனவும் Yeni Matalyaspor அணி நிர்வாகம் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் மறைவுக்கு சக கால்பந்து வீரர்கள் மற்றும் நண்பர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.